Wednesday, March 9, 2011

வாழ்க்கை

மிகவும் ரசித்து வாசித்தேன். கவிதையை எழுதியது.....

வெற்றிகள் உனக்குசிற்பங்களைப் பரிசளிக்கலாம்,
ஆனால்தோல்விகள் மட்டுமே
உனக்குஉளிகள் வழங்கும்என்பதை
உணர்ந்துகொள்...
மழை, நதி, விதைவிழுவதால் எழுபவை இவை..
நீ மட்டுமேன்விழுந்த இடத்திலேயேஉனக்கு கல்லறை கட்டுகிறாய்....
உன் சுவடுகள்சிறைப்பிடிக்கப்படலாம்,
உன் பாதைகள்திருடப்படலாம்,
பாதுகாத்துக்கொள்உன் பாதங்களை...
உன் வழிகளெங்கும் தூண்டில்கள் விழுந்திருக்கலாம்,
நீந்த முடியாதபடி வலைகள் விரித்திருக்கலாம்.
தண்ணீராய் மாறித் தப்பித்துக் கொள்..
தங்க மீனாய்த்தான் இருப்பேன்...
என தர்க்கம் செய்யாதே....
நீவெற்றி பெற்றதாய் நினைக்கும்பல
இடங்களில்தோல்விதான் அடைந்திருப்பாய்...
நீதோற்றுப்
போனதாய்நினைக்கும்பல
தருணங்களில்வெற்றிதான் பெற்றிருப்பாய்...
உணர்ந்துகொள்
நீ
தோல்வியுற்றதுவாழ்க்கையிலல்லவாழ்க்கையை புரிதலில்...

வாழ்க்கை

கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசத்திலிருந்து கண்டெடுத்தவை!!
> உனக்கு நானோஎனக்கு நீயோசுமையாகிப் போகாமல்துணையாகிப் போவோம்வா!
> தேவைதானா என்றுகேட்டிருந்தால்தீயை அறிந்திருக்க முடியுமா?குரங்கிலிருந்து மனிதன்குதித்திருக்க முடியுமா?தூரத்தைநெருங்கியிருக்க முடியுமா?நேரத்தைசுருக்கியிருக்க முடியுமா?தேவைதான்முட்டைக்குள் இருக்கும்உயிரை மூச்சு விடவைக்கிறது
> அனுபவங்களின்தொகுப்புத்தான் வாழ்க்கைநம் வாழ்க்கைமுறைதீர்மானிக்கப்பட்டஅனுபவங்களையேநம்மீது திணித்ததுயாருக்கோ நேர்ந்தஅனுபவங்களைஒப்புக் கொள்ளுமாறுநம்மீதுதுப்பியதுஆகவேதாத்தாக்களின்நகல்களாகவே தமிழன்தயாரிக்கப்பட்டான்சாதிக்கும் முளையிருந்தும்சோதிக்கும் முயற்சியில்லை

Sunday, December 21, 2008

தமிழ் பாடல் வரிகள்- Salangai Oli

தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா

சுதியும் லயமும் ஒன்று சேர
தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

உலக வாழ்கை நடனம்
நீ ஒப்புக் கொண்ட பயணம்
அது முடியும் போது தொடங்கும்
நீ தொடங்கும் போது முடியும்

மனிதன் தினமும் அலையில் அலையும் ...
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளம் இங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பும் இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை

தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவம் உண்டு பாபம் இல்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை

**********************************************************
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்

இளமை சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடி கொள்ளுமோகொழிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர் துளி
ஊடலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி

மௌனமான நேரம் ,,,,

இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
ஆடலான நேசமோ கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ

தமிழ் பாடல் வரிகள் - காதல் ஓவியம்

தானம் தம்த தானம் தம்தா
தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம் உந்தன்
சொந்தம் தந்த சொந்தம்
ஒலையில் வேறேன்ன செய்தி?
தேவனே நான் உந்தன்பாதி..
இந்த பந்தம் ராக பந்தம் உந்தன்
சொந்தம் தந்த சொந்தம்..

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

அமுதகானம் நீதரும் நேரம்.நதிகள்
ஜதிகள் பாடுமே...
விலகிப் போனால் எனது சலங்கை
விதவையாகி போகுமே
கண்களில் மெளனமோ கோவில் தீபமே
ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே
மார்மீது பூவாகி வீழவா...
விழியாகி விடவா..?

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

இசையை அருந்தும் சாதகப் பறவைப் போல
நானும் வாழ்கிறேன்..
உறக்கமில்லை எனினும் கண்ணீல் கனவு
சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம்
வெண்ணீரில் நீராடும் கமலம்..
விலகாது விரகம்

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே..

********************************************************************************************************

பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ
இது யார் சதியோ இரைவன் சபையில் இதுதான் விதியோ

(உன் பூஜைக்காக)

இளங்காற்றைத் தாங்காத பூவின் ஜாதி
இடி வீழ்ந்து சருகாதல் தானோ நீதி
கோவில் என்றால் தீபம் எங்கே
தீபம் இல்லை நீதான் எங்கே
பொங்குது மனம் இது ரகசிய ரணம்
கண்களில் குணம் இது உனதர்ப்பணம்
பொன்னெழிற் சிலை இது என்வசம் இலை இரு கண்களில் ராத்திரி வேதனை
இருவிழி இலையெனும் ஒரு குறை இதுவரை
இதயத்தில் இருந்தது இல்லையே
விழிகளில் உலவிய ஒளிமகள் பிரிந்ததும்
உண்மையில் என் விழி இல்லையே
கனவு வரும்போது அவளின் முகதீபம்
பிரிய முடியாது பூமுகம் நினைவினில்

**************************************************************************
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
நம்தம்

(பூவில்)

ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும்
தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்
நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்றபோதும் அந்தத் தீயே வெந்து போகும்
நானே நாதம்...ஆஆஆஆஆஆஅ
நம்தம்

(பூவில்)

வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும்...ஆஆஆஆஆஆஅ
நம்தம

*************************************************************************

வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலமிது
இவள் நாதம் தரும் சுகசுரங்கள்
எந்தன் தேவி உந்தன் சமர்ப்பனங்கள்

(வெள்ளிச்)

உந்தன் சங்கீதச் சலங்கை ஒலி
இந்த ஏழைக்கு கீதாஞ்சலி
அந்தப் பாதங்கள் அசையும் ஒலி
எந்தன் பூஜைக்கு கோயில் மணி
சுவரெங்கும் கண்ணாக ஆகும் இனி
உயிரோடு சேரும் சுருதி



Tuesday, November 25, 2008

தமிழின் எடையை அதிகரியுங்கள்

வாழ்க்கையின் வெற்றிடத்தைக் காதலால் நிரப்புங்கள்.
வாழ்க்கை என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைக் காதல் அகராதியில் கண்டுபிடியுங்கள்.
காதலியின் உள்ளங்கையில் கவிதை எழுதுங்கள்.
காதல் கவிதைகளால் தமிழின் எடையை அதிகரியுங்கள்,
காதல் மனிதனின் வரமல்லவா?
கவிதை மொழியின் உரமல்லவா?
*****
சப்தம் கடந்த சங்கீதம் காண
வார்த்தை கடந்த கவிதைத்தேட
வர்ணம் கடந்த ஓவியம் பேண
மனசை ஆற்றுப்படுத்துங்கள்.
******
வைரமுத்துவிடமிருந்து..


வைரமுத்துவின் வைரவரிகள்

மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு - சில
மின்னல்கள் எனை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு - மனம்
சில்லென்று சிலபொழுது சிலிர்ததுண்டு
மோகனமே உன்னைப்போல என்னையாரும் - என்
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என்நெஞ்சில் உன்னைப்போல - எரி
அமிலத்தை வீசியவர் எவரும் இல்லை
.................
கோடிகோடி ஜீவன்கள் சுகித்த பின்னும் - இன்னும்
குறையாமல் வீசுதடி காற்றின் கூட்டம்
கோடிகோடி ஜீவன்கள் தாகம் தீர்த்தும் - துளி
குறைந்தொன்றும் போகவில்லை காதல் தீர்த்தம்
மூடிமூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் - மண்ணை
முட்டிமுட்டி முளைப்பதுதான் உயிரின் சாட்சி
ஓடிஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே - நாம்
உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி
.................